ADDED : மார் 25, 2026 11:28 PM

திருக்கனுார்: வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த வாதானுாரில் சத்தியபாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள், கருடாழ்வார், ராமானுஜர், பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கடந்த 23ம் தேதி விஸ்வக்ஸேன ஆராதனம், புண்ணியாகவாஜனம், மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று கோ பூஜை, நித்ய ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, மூலவர் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மாலை சுவாமி திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக, சீதா ராம லட்சுமண ஆஞ்சநேய சுவாமிக்கு கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
