/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்ட்டோ பாருக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
/
ரெஸ்ட்டோ பாருக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
ரெஸ்ட்டோ பாருக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
ரெஸ்ட்டோ பாருக்கு எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 19, 2025 08:18 AM

திருபுவனை: திருபுவனையில் ரெஸ்ட்டோ பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருபுவனை மேம்பாலம் அருகில் புதிதாக ரெஸ்ட்டோ பார் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வி.சி., த.வெ.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேற்று காலை 11:30 மணியளவில், ரெஸ்ட்டோ பார் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், அங்கிருந்து ஊர்வலமாக சென்று விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் திருபுவனை மேம்பாலத்திற்கு கிழக்கே மதியம் 12:00 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, பகல் 2:00 மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

