/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
விநாயகா மிஷன் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : பிப் 06, 2026 08:33 AM

புதுச்சேரி: சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகம், லாட்வியாவின் துரிபா பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஈடுபாட்டிற்கான வழிகளை ஆராய்வதற்காக, லாட்வியாவின் துரிபா பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டது.
துரிபா பல்கலைக்கழக மூத்த பிரதிநிதிகள் குழுவினர் சென்னை வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது, மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம், கூட்டு கல்வி முயற்சிகள், தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள், ஆராய்ச்சி ஈடுபாடு மற்றும் சர்வதேச கல்வி வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.
நிகழ்சியில், விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் கணேசன் பேசுகையில், ' துரிபா பல்கலைக் கழகத்துடனான எங்கள் ஈடுபாடு, கல்வித் தரம், தலைமைத்துவத் திறன் மற்றும் நீடித்த நிறுவன கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உலகளாவிய ஒத்துழைப்புக்கான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
பரஸ்பர வளர்ச்சி மற்றும் புரிதலுக்கு பங்களிக்கும் ஒத்துழைப்புப் பகுதிகளை ஆராய்வதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்' என்றார்.

