ADDED : அக் 12, 2024 05:26 AM

புதுச்சேரி: அமெச்சூர் கைப்பந்து கழகம், காந்திராம் நற்பணி இயக்கம் சார்பில், தென் மண்டல அளவிலான நடந்த கைப்பந்து போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி, உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில், மூன்று நாட்கள் நடந்த கைப்பந்து போட்டியில், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல் மூன்று இடங்களில் பிடித்த அணிகளுக்கு, பொதுச்செயலாளர் உத்பவா, செயலாளர் காமராஜ் ஆகியோர் பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில், பொருளாளர் வேல்முருகன், அமெச்சூர் கைப்பந்து கழகம், காந்திராம் நற்பணி மன்ற நிர்வாகிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

