ADDED : செப் 15, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: மடுகரை அடுத்த சொக்கம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமாவாசை 54; தனியார் கம்பெனி வாட்ச்மேன். இவர், கடந்த 12ம் தேதி கரியமாணிக்கம் - மடுகரை சாலை வழியாக நடந்து சென்றார்.
அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அமாவாசை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.