ADDED : ஜூன் 25, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேல்நிலைத் நீர்தேக்கத்தொட்டி பராமரிப்பு பணியின் காரணமாக நாளை (26ம் தேதி) விஸ்வநாதன் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட விஸ்வநாதன் நகர் மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக நாளை (26ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை புதுச்சேரி மாணிக்கமுதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர், லுார்து நகர், எம்.ஜி.,ரோடு, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை தெரித்துக்கொள்கிறோம்.