sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும்

/

 பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும்

 பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும்

 பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும்


ADDED : நவ 24, 2025 05:53 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பி.,க்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் மனு

புதுச்சேரி: பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாட்சா தலைமையில் சங்க நிர்வாகிகள் வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி., ஆகியோரை நேரில் சந்தித்து டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பார்லிமெண்ட்டில் குரல் எழுப்ப வேண்டும் என மனு, அளித்தனர்.

ம னுவில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசு பள்ளி அனைத்து ஆசிரியர்களும் டெட் முடிக்க வேண்டும் என, தீர்ப்பு வழங்கியது.

இதனால் நாடு முழுதும் 20 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து விலக்கு அளிக்க கோரி எதிர்வரும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவும் பிரதமருக்கு கடிதம் எழுதவும், ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் வலியுறுத்தி நாடு முழுதும் உள்ள லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்களுக்கு கடிதம் கொடுக்கப்படுகிறது.

எனவே, தாங்களும் புதுச்சேரி மாநிலம் சார்பில், பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவினை பெற்றுக்கொண்ட எம்.பி.,க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவதாகவும், பார்லிமெண்ட்டில் ஆசிரியர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

பொது செயலாளர் தீபக், பொருளாளர் ராஜ்குமார், ஆசிரியர்கள் ராஜேஷ், திருமேனி அழகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us