/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 10, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : பூராணங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்வசத்ததில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நாளை மாலை 5:00 மணியளவில் நடக்கிறது. நாளை மறுநாள் தெப்பல் உற்சவம் நடக்கிறது.