sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மே 11, 2025 04:02 AM

Google News

ADDED : மே 11, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவிலில், நாளை (12ம் தேதி) சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடக்கிறது.

புதுச்சேரி - கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (12ம் தேதி) சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் அன்னம், சிம்மம், அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத சாரங்கபாணி பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (12ம் தேதி) காலை 7.00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us