ADDED : பிப் 21, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அதில், திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு தலா 1 லட்சம் வீதம் 14 லட்சம், மருத்துவ உதவித் தொகை திட்டத்தில், 14 நபர்களுக்கு தலா 15 ஆயிரம் வீதம் 2.10 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ், 8 பேருக்கு தலா 13 ஆயிரம் வீதம் 1.04 லட்சம் என, மொத்தம், 17 லட்சம் நிதியுதவிக்கான அரசாணையை சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார். மணவெளி தொகுதி பா.ஜ., தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ண மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானசேகர், தட்சிணாமூர்த்திஉட்பட பலர் பங்கேற்றனர்.