ADDED : ஏப் 15, 2025 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; அரசு பொது மருத்துவமனை எதிரில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை பின்புறம் உள்ள செஞ்சி சாலையில் 55, வயது மதிக்கதக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பெரிய கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

