UPDATED : ஜூலை 07, 2026 07:19 PM
ADDED : ஜூலை 07, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முன், 55 வயது மதிக்கதக்கவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்திருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துமவனையில் சேர்த்தனர். அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தார்.
இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
