ADDED : ஜூலை 27, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் கம்பெனி துப்புரவு பணியாளர். இவரது கணவர் அரிகிருஷ்ணன் தினமும் குடித்து வந்தார். இதனை மனைவி கண்டித்தும் தொடர்ந்து அரிகிருஷ்ணன் குடித்து வந்தார்.
மனமுடைந்த ஆதிலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.