ADDED : ஜூலை 10, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன். இவரது மனைவி ராஜேஸ்வரி, 40. இவர் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது மகள் தனது பள்ளி சீருடையை, இரவு நேரத்தில் துவைத்தார். இதனால், கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு பிரச்னை ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் துாங்கிய பிறகு, ராஜேஸ்வரி அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.