ADDED : ஜூன் 22, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்தார்.
கட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி குணவதி, 35. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்தது. இந்நிலையில், குணவதி, கடந்த 3ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சந்தோஷ்குமார், கொடுத்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.