ADDED : ஆக 03, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த கீழ் சாத்தமங்கலம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கமலாராணி, 25; இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர், கடந்த 20ம் தேதி மாலை மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.