ADDED : மே 28, 2026 06:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முத்தியால்பேட்டை, செந்தாமரை நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி, 51. திருக்கனுார் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளர் வேலை செய்த அவர், தற்போது வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன், ஆனந்தியின் கணவர் மாரிமுத்துவின் பெரியம்மா இறந்துவிட்டார். ஈமச்சடங்கிற்கு மனைவி ஆனந்தியை மாரிமுத்து அழைத்தார். அதற்கு ஆனந்தி வர மறுத்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த ஸ்கூட்டியில் வெளியே சென்ற ஆனந்தி இதுவரை வீடு திரும்பவில்லை. மாரிமுத்து புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 0413-2336066 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
