ADDED : நவ 10, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை, தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் மாதவன், 40; பெயிண்டர்.
குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவுகுடித்துவிட்டுவீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி வேல்விழி தட்டி கேட்டார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
விரக்தியடைந்த மாதவன், அவரது அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி வேல்விழி புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

