ADDED : ஏப் 06, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மயங்கி விழுந்த பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் காமாட்சி தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி தமிழ்ச்செல்வி, 40. இவர் நேற்று வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.