/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
/
அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
ADDED : ஜன 19, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
உறுவையாறு கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி மோனிஷா, 32. இவருக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த 14ம் தேதி மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு, மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா நேற்று இறந்தார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

