ADDED : ஜன 23, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நரம்பியல் நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மூச்சு திணறி இறந்தார்.
மடுகரை, கருமார வீதியை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி, 35. இவர், கடந்த ஒரு வருடமாக நரம்பியல் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கணவரிடம் தெரிவித்தார்.
அதையடுத்து அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரி வித்தார்.
புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

