நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பைக் மோதியதில் பெண் இறந்தார்.
காரைக்கால் பச்சூர் ஜெயம்நகரை சேர்ந்த ரெங்கையன் மனைவி பக்கிரியம்மாள், 64; இவர் நேற்று அதிகாலை கீழபுத்தமங்கலம் பகுதியில் உறவினர் வீட்டு இறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
பச்சூர் பாலம் அருகே வேகமாக வந்த பைக் பக்கிரியம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பக்கிரியம்மாள் மற்றும் பைக்கில் வந்த நபர் என இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பக்கிரியம்மாள் இறந்தார்
நகர போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய செல்லுார் தென்னங்குடி மெயின்ரோடு சிலம்பரசன், 24, மீது வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.

