/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
/
மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
ADDED : மார் 10, 2026 04:34 AM

புதுச்சேரி: மகளிர் உதவித் தொகைக்காக சிவப்பு குடும்ப அட்டைதாரார்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் குவிந்ததனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவுப்படி எந்த உதவித்தொகையும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட மாதந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆனது, பிப்ரவரி, மார்ச் என இரண்டு மாதங்களுக்கு சேர்த்து 63 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.31.50 கோடி நேற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உதவித்தொகை பெறுவதில் சிக்கல் உள்ளவர்கள், மற்றும் பதிவு செய்ய முடியாதவர்கள் சாரத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். இதனால் அலுவலக வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

