sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது பெண்கள் ஆர்ப்பாட்டம்

/

ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது பெண்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 26, 2025 03:54 AM

Google News

ADDED : மார் 26, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது என, பெண்கள் நீதிமன்றம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவளக்குப்பம், தானாம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில், பயின்ற ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஆசிரியர் மணிகண்டனை, 25, சரமாரியாக தாக்கி, பள்ளியை சூறையாடினர்.

தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை போக்சோ வழக்கில், 15ம் தேதி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டன், ஜாமின் கோரி, புதுச்சேரி நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த தகவல், பெண்கள் அமைப்பினருக்கு தெரியவந்தது.

அதையடுத்து, 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று காலை 10:30 மணியளவில், கடலுார் சாலையில் உள்ள நீதிமன்றம் முன், ஆசிரியருக்கு ஜாமின் வழங்க கூடாது என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை உருளையன்பேட்டை போலீசார் அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us