sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 

/

அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 

அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 

அரிசியில் மிகப்பெரிய ஊழல் மகளிர் காங்., குற்றச்சாட்டு 


ADDED : ஜூலை 07, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு அரிசியில் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர் என புதுச்சேரி மாநில மகளிர் காங்., தலைவி நிஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் காங்., அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சியில் ரெஸ்டோ பார், நில அபகரிப்பு, குண்டர்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கேசினோ, அரிசி ஊழல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதில் ஒரு கிலோ அரிசி ரூ.28 ஆனால் ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ.., அரசு ஒரு கிலோ அரிசியை ரூ.48க்கு வாங்குவதாக கணக்கு காட்டுகிறது. அப்படியென்றால் மாதம் தோறும் ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடி வரை ஊழலை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த அரிசியை மதியம் சமைது இரவு சாப்பிடுவதற்குள் துர்நாற்றம் வீசுகிறது. இந்த அரிசியை மக்கள் வாங்காததால் மீண்டும் கள்ள சந்தையில் விற்கின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்., மக்கள் நலன் சார்ந்த பிரசாரங்களில் அரிசி போடாததை கண்டித்து பேசியதன் விளைவாக, கடமைக்கு என்று அரசு கண்துடைப்புக்காக தரமற்ற அரிசியை கொடுத்து வருகிறது. அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.20 அதிகமாக கூட்டி வைத்து மிக பெரிய ஊழலை செய்து வருகிறார்கள். இந்த ஊழலை கண்டித்து புதுச்சேரி மாநில மகளிர் காங்., சார்பாக வரும் வாரங்களில் மிக பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us