/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் கல்லுாரியில் மகளிர் தின விழா
/
அரவிந்தர் கல்லுாரியில் மகளிர் தின விழா
ADDED : மார் 08, 2026 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சிவசங்கரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் பவதாரணி கலந்து கொண்டு பெண்கள் கல்வி, தன்னம்பிக்கை, சமூக முன்னேற்றம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்தும், பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சமூகத்தில் முன்னேற வேண்டும் என்றார்.
தொடர்ந்து பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

