ADDED : பிப் 14, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
புதுச்சேரி, கொம்பாக்கம்பேட், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன், 44; நகை பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய தனசேகரன், கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, மருந்து சாப்பிட்டு வந்தார்.
அவர், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.