ADDED : ஆக 24, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கரையாம்புத்துாரில் தனியார் மதுக்கடையில் கூலி தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள தமிழக பகுதியான கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சற்குணம் 47; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை கரையாம்புத்தூரில் உள்ள தனியார் மதுக்கடையில், மது குடிக்க சென்ற சற்குணம் நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து நிலையில் கிடந்துள்ளார். இது குறித்த தகவலறிந்த கரையாம்புத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
