ADDED : அக் 03, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்காலில் பைக் மோதி சாலையை கடக்க முயன்றவர் இறந்தார்.
மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி காட்டுச்சேரி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன், 38; இவர் காரைக்காலில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி இரவு உணவு வாங்குவதற்கு சாலையை கடந்து சென்றபோது அதிவேகமாக வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த தியாகராஜனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
போக்குவரத்து போலீசார் பைக் ஒட்டிய வரிச்சிக்குடி சோனியா காந்தி நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 38; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

