ADDED : மார் 04, 2024 05:59 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : கணவர் சர்ச்க்கு அழைத்து செல்லாததால் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரிப்பாக்கம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் அமரன் 27, தனியார் கம்பெனி ஒப்பந்த ஊழியர்.
இவரது மனைவி சந்தியா 25, இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டனர். 5 வயதில் ஒரு பெண், 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை சந்தியா, பாக்கம் கூட்ரோட்டில் சர்ச்சுக்கு கணவரை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கு அமரன் அழைத்து செல்வதாக கூறிவிட்டு கம்பெனிக்கு வேலை சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த சந்தியா வீட்டில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
