sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நகராட்சி  ஜீப்பை திருட முயன்ற வாலிபர் கைது 

/

நகராட்சி  ஜீப்பை திருட முயன்ற வாலிபர் கைது 

நகராட்சி  ஜீப்பை திருட முயன்ற வாலிபர் கைது 

நகராட்சி  ஜீப்பை திருட முயன்ற வாலிபர் கைது 


ADDED : மார் 23, 2025 04:12 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி ஜீப்பை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி சாலை அருகே லாரன் பஜார் தெருவில், நகராட்சி அதிகாரியின், பி.ஒ.01, ஜி 4774 என்ற ஜீப்பை டிரைவர் காந்திராஜ், 52, என்பவர் நேற்று மாலை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது, ஒருவர் ஜீப் அருகே வந்து ஜீப்பை எடுத்து செல்ல முயன்றார். அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை சேர்ந்த சண்முகம், 21, என்பதும், திருச்சங்கோடு பகுதியில், அரசு பஸ் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில், இருந்து ஜாமினில் வெளியில் வந்தவர் என தெரியவந்தது.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த அவர், ஜீப் திருட முன்ற போது, பிடிப்பட்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us