/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
ADDED : செப் 19, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் நேற்று முன்தினம் கருணாநிதி புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொது இடத்தில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.