ADDED : ஜூலை 21, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நுாறடி சாலை வழியாக ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஒருவர் தகராறு செய்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். வாணரப்பேட்டை அலென் வீதியை சேர்ந்த சுப்ரியல், 33, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.