ADDED : ஆக 10, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு திருமுருகேசன், காவலர் ராஜ்குமார் மற்றும் ஊர்காவல் படை வீரர் மனோபாலா ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை தனியார் மதுபான கடை அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில் , கடலுார் மாவட்டம் பெரியக்குப்பம் அடுத்த பேட்டோடை பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 24; என்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.