ADDED : நவ 23, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் சந்திப்பில், வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், 'கடலுார் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தபிரதீப் 24; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

