ADDED : டிச 21, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் நோணாங்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அந்த பகுதியில் சாராயக்கடைக்கு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அவதுாறாக பேசி, ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை பிடித்து, விசாரித்தனர். முருங்கப்பாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்த சிவன், 36, என, தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர்.

