ADDED : ஏப் 10, 2026 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, குடியிருப்புபாளையம் அரசு ஆரம்ப பள்ளி அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திட்டி கொண்டிருந்தார். போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், குடியிருப்புபாளையம் சுப்பையா நகரை சேர்ந்த ராஜ்குமார் 27; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

