ADDED : டிச 08, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொதுமக்களை, அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை, அவதுாறாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், அரியாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன், 20, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

