/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
ADDED : அக் 14, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது உறுவையாறு நத்தமேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 21, என்பவர் மதுபோதையில் மங்கலம்-உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.