ADDED : பிப் 02, 2026 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடலுார் மாவட்டம் ஏ.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் 25, என்பவர் மது போதையில், மடுகரை-ராம்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

