/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பலாத்காரம் வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமி பலாத்காரம் வாலிபர் போக்சோவில் கைது
ADDED : செப் 25, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து, 24; கூலி தொழிலாளி. இவர் புதுச்சேரியில் பிளஸ் 1 படித்து வரும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நேற்று மாரிமுத்துவை கைது செய்தனர்.