/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : மார் 30, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சாலையில், நேற்று முன்தினம் வாலிபர் கத்தியுடன் நின்று, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, சப் இன்ஸ் பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ரிஷி, (எ) ரிஷிகாந்தலிங்கம், 18, என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.