ADDED : ஜன 22, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் அருகே போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர்அருண்,25; கூலித்தொழிலாளி. இவர், 15 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் நெருங்கி பழகியதில், இரு முறை கர்ப்பமடைந்த சிறுமி, அதனை கலைத்தார்.
இதனிடையே சிறுமியை அருண் திருமணம் செய்து கொண்டார். அவருடன் அருண் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது மனைவிக்கு தெரியவந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அருண் மீது நெட்டப்பாக்கம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.