ADDED : மார் 30, 2025 08:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம் : போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், 20; என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, தலைமறைவான இஸ்மாயிலை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.