ADDED : அக் 29, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லுாரில், வாலிபர் கத்தியுடன் நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து, விசாரித்தனர். காந்தி திருநல்லுார், ஓடை தெருவை சேர்ந்த முருகன், 30; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

