நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பூமியான்பேட்டை, விக்டோரியா நகர் அருகில் வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் பூமியான்பேட்டை, பாவானர் நகரை சேர்ந்த விஜயகுமார், 31; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

