நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். வானுார் அண்ணா நகரைச் சேர்ந்த சுதாகர், 28, என்பவர் மது போதையில் பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டு, இடையூ று செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

