/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
/
ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
ADDED : செப் 27, 2024 05:12 AM
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை, கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் ஆல்பேட்டை ராஜா 32; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்த பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் 28; என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.