/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து
/
பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து
ADDED : ஜன 16, 2025 11:21 PM

புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு சிந்து, கிரண் முன்னேறினர்.
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, 'நம்பர்-16' ஆக உள்ள சிந்து, 46 வது இடத்திலுள்ள ஜப்பானின் மனாமி சுய்ஜுவை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-15 என வசப்படுத்தினார்.
தொடர்ந்து அடுத்த செட்டையும் இவர், 21-13 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனுபமா, 6-21, 9-21 என ஜப்பானின் மியாஜகியிடம் வீழ்ந்தார்.
கிரண் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ('நம்பர்-38'), பிரான்சின் லானியர் ('நம்பர்-17') மோதினர். முதல் செட்டை கிரண் 22-20 என போராடி வென்றார். பின், அடுத்த செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் கிரண் 22-20, 21-13 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, ஜப்பானின் மிட்சுஹாஷி, ஒகமுரா ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-16 என்ற செட்டில் போராடி வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி, ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி தோல்வியடைந்தன.

