/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
ADDED : நவ 18, 2025 10:48 PM

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தைவானின் லி-வெய் போ, கோ சி சங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட் துவக்கத்தில் இருந்து இழுபறியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 22-22 என சமனில் இருந்தது. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 25-23 என செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 21-16 என வசப்படுத்தியது. 48 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 25-23, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 10-21, 14-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் பேபிரியானா, மெய்லிஷா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

